பேச்சு
--------
யாருக்கும் தெரியாமல்
பேசவரும்போதெல்லாம்
யாராவது வந்துவிடுகிறார்கள்.
யாரும் வராமல் நீ வந்துவிட்டால்
வராமல் நிற்கிறது பேச்சு.
எழுதியவர் : ஏக்நாத்
பிம்பங்கள்
என் உணர்வு பிம்பங்கள்...!
Tuesday, August 25, 2009
Tuesday, February 12, 2008
காதலி
Wednesday, August 22, 2007
உணர்ந்துகொள் !

வெற்றிகள் உனக்கு
சிற்பங்களைப் பரிசளிக்கலாம்,
ஆனால்
தோல்விகள் மட்டுமே உனக்கு
உளிகள் வழங்கும்
என்பதை உணர்ந்துகொள்...
மழை, நதி, விதை
விழுவதால் எழுபவை இவை..
நீ மட்டும் ஏன்
விழுந்த இடத்திலேயே
உனக்கு கல்லறை கட்டுகிறாய்....
உன் சுவடுகள்
சிறைப்பிடிக்கப்படலாம்,
உன் பாதைகள்
திருடப்படலாம்,
பாதுகாத்துக்கொள்
உன் பாதங்களை...
உன் வழிகலெங்கும்
தூண்டில்கள் விழுந்திருக்கலாம்,
நீந்த முடியாதபடி
வலைகள் விரித்திருக்கலாம்.
தண்ணீராய் மாறித் தப்பித்துக் கொள்..
தங்க மீனாய்த்தான் இருப்பேன்...
என தர்க்கம் செய்யாதே....
நீ
வெற்றி பெற்றதாய் நினைக்கும்
பல இடங்களில்
தோல்விதான் அடைந்திருப்பாய்...
நீ
தோற்றுப் போனதாய்
நினைக்கும்
பல தருணங்களில்
வெற்றிதான் பெற்றிருப்பாய்
உணர்ந்துகொள்
நீ தோல்வியுற்றது
வாழ்க்கையிலல்ல
வாழ்க்கையை புரிதலில்...
Wednesday, May 30, 2007
நீ மட்டும் நிறுத்தி விடாதே !
தெருக்குழாயில்
நீர் வரும்போதெல்லாம்
என் இதயம் துளிர்க்கும்
நீயும் வருவாயென...
நீர் சுமந்து நீ இடறினால்
என் இதயம் துடிக்கும்
உனக்கு வலிக்குமென...
உனக்குத் தெரியுமா?
நீ வராத இரு நாட்களில்
குழாய் நீரும் குழம்பியிருந்தது
என்னைப் போலவே...
எவர் எதிர்த்தாலும் பரவாயில்லை
தயவு செய்து- நீ மட்டும்
நிறுத்தி விடாதே!
நீர் சுமப்பதையும்...
நான் சுவாசிப்பதையும்...
Tuesday, May 29, 2007
Tuesday, May 15, 2007
உனக்கான காத்திருப்புக்களிலெல்லாம்
ஏறிவிடும் மனதின்வயது,
உன்னை பார்த்தநிமிடத்திலேயே
குழந்தையாக மாறி குதுகுலிக்கிறது.
யெஸ்.பாலபாரதி
Thursday, May 10, 2007
நம்பிக்கை...
Subscribe to:
Posts (Atom)



